Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் புற்றுநோய்  விழிப்புணர்வு

பிப்ரவரி 04, 2023 06:49

பாவூர்சத்திரம் : பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சி சவுக்கை முக்கு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.  

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குதென்காசி கேன்சர் சென்டர்  இயக்குனரும் அடையாறு கேன்சர் சென்டர் முன்னாள் தலைமை டாக்டர் அருணா சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது சாலையில் வந்த அனைத்து வாகன ஓட்டுனர்களிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த  பான், குட்கா, புகையிலை, சிகரெட் ஆகிய போதை பொருட்களை  புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து அவற்றை அப்புறப்படுத்தினார் .

மேலும் புற்று நோயால் ஒரு தனி நபரின் வாழ்க்கையும் அவரது குடும்பத்தின் நிலைமையும் எவ்வாறு பாதிப்படையும் என கூறப்பட்டது.  வாகன ஓட்டுனர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி சர்ட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தென்காசி கேன்சர் சென்டர் சார்பாக வழங்கப்பட்டது.  

இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.  நிகழ்ச்சியில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் டாக்டர் சிவசந்திரன், தென்காசி மெடிக்கல் சென்டர் இயக்குனர் பாரதிராஜா பொது மேலாளர் அகமது பாத்திமா, ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா பாண்டியன், அமமுக பிரமுகர் சுப்பிரமணியன் என்ற சுப்பு பாண்டியன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்ஆறுமுகம், ஆசிரியர்கள் சுரேஷ் ,சங்கர், என்சிசி ஆசிரியர் செந்தில் பாபு ,என்.எஸ்.எஸ்.ஆசிரியர் குத்தாலம் மற்றும் குற்றாலம் காவல்துறை, தென்காசி போக்குவரத்து துறை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்