![](admin/uploads/.5cd9273ed64bc4.82886298.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆலங்குளம் : ஆலங்குளம் நகர திமுக சார்பில், அண்ணா நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் தலைமை வகித்தார்.
முன்னாள் நகரச் செயலாளர் பாப்புலர் ஏ.செல்லத்துரை, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கே.எஸ்.தங்கசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் மு.செல்லத்துரை, அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர் இ.சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் எஸ்.பி.ராஜதுரை, மாவட்டப் பிரதிநிதி சு.அன்பழகன், ஒன்றியப் பிரதிநிதி ஆதிவிநாயகம், ராசையா, பி.டி.ஜெயராஜ், ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.