![](admin/uploads/.5c7a142e73f312.80205893.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் : மாநில குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாவூர்சத்திரம் மாணவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் பால்மணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றான்.
மேலும் மாணவன் சத்ரு தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தான்.
இதையடுத்து அம்மாணவர்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சால்வை அணிவித்து பாராட்டியதுடன், ஊக்கத்தொகையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, குறும்பலாப்பேரி டால்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.