Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட அளவிலான என்.எம். எம்.எஸ் 2வது  இலவச மாதிரி தேர்வு 

பிப்ரவரி 06, 2023 01:28

தென்காசி : பள்ளிக்கல்வித்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், இசக்கி வித்யாஷரம் சிபிஎஸ்சி பள்ளி, மேலகரம் எல்.என்.சேரிடபில் டிரஸ்ட், எஸ்.பி.ஐ.லைப் இன்சூரன்ஸ் இணைந்து நடத்திய தென்காசி மாவட்ட அளவிலான 2வது என்.எம். எம்.எஸ் இலவச மாதிரி தேர்வு தென்காசி இசக்கி வித்யாஷரம் சிபிஎஸ்சி பள்ளியில்  நடைபெற்றது.


முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இசக்கி வித்யாஷரம் பள்ளி சேர்மன் இசக்கிதுரை பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாவட்ட அளவில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், இடைகால், புளியங்குடி, நல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 29 பள்ளிகளில் இருந்து 352 மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.


தேர்வுகான ஏற்பாடுகளை தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், வட்டார நூலகர் பிரமநாயகம், அரசு அலுவலர்  ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், கிளைநூலகர் சுந்தர், பிரச்சாரச் செயலாளர் வெற்றிவேலன்,   இசக்கி வித்யாஷரம் பள்ளி நிர்வாக இயக்குநர் ராம்குமார்,  முதல்வர் முனைவர் டாக்டர்.மோனிகா‘டி’சோசா, மேலகரம் எல்.என். சேரிடபில் டிரஸ்ட் நீலகண்டன் கரிசல்குடியிருப்பு ஆசிரியர் பாபு ,  எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் அட்வைசர்கள் முகிலரசன் ஏஞ்சல் பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சண்முகக்குமார், நூலகர்கள் ஜுலியாராஜசெல்வி, நிஹ்ம்மதுன்னிஸா, வாசகர் வட்ட நிர்வாகிகள் சலீம், குழந்தையேசு, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்