![](admin/uploads/.5cdeab71005806.07171209.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், "மொழிஞாயிறு" தேவநேயப் பாவாணரின், 121-வது பிறந்த தின விழா கொண்டாட்டம்!
திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை!
திருநெல்வேலி : மொழிஞாயிறு" என்றழைக்கப்படும், தேவநேயப் பாவாணர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் ஆவார். சொல்லாராய்ச்சி வல்லுநரான இவர், நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று, சிறப்பு மிக்க வகையில் சொல் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
மறைமலை அடிகளார் வழியில் நின்று, தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்த இவரின் தமிழ் அறிவையும், பன்மொழி இயல் அறிவையும், போற்றிடும் வகையில், இவருடைய மாணவரான, "பாவலரேறு" பெருஞ்சித்திரனார் இவருக்கு, "மொழி ஞாயிறு" என்னும் பட்டத்தை வழங்கி, சிறப்பித்தார். இத்தகைய சிறப்புமிக்க தேவநேயப் பாவாணரின், 121-வது பிறந்த தினமான இன்று (பிப்ரவரி.7) காலையில் திருநெல்வேலியில், மாவட்ட "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, தேவநேயப் பாவாணரின் திருவுருவப்படத்திற்கு, மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன், தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,"மலர் மாலைகள்" அணிவித்தும், மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, அனைவருக்கும் "இனிப்புகள்" வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியின் போது, * பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட மத்திய நூலகத்திற்கு,"மொழி ஞாயிறு" தேவநேய பாவாணர் நினைவு நூலகம் என்று,பெயர் சூட்ட வேண்டும்!
* தேவநேயப் பாவாணருக்கு திருநெல்வேலி மாநகர பகுதியான, பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு எதிரே, முழுவுருவ வெண்கலச் சிலையை, நிறுவ வேண்டும்!"- ஆகிய, இரண்டு தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாநகர இளைஞர் அணி செயலாளர் "சிவந்தி" முத்துப்பாண்டி,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் "வழக்கறிஞர்"
டி.அப்துல்ஜப்பார், பாளையங்கோட்டை ஒன்றிய இணைச் செயலாளர்
சி.பா. பரமசிவபாண்டியன், மேலப்பாளையம் பகுதி இணைச்செயலாளர்
கொ.முருகேஷ். சிவந்திபட்டி ஊராட்சி இளைஞர் அணி செயலாளர்
மு.முத்துவளவன், தச்சநல்லூர் பகுதி செயலாளர் செல்வக்குமரன், நிர்வாகிகள்
ஏ.புல்லட்ராஜா, நயினார், ம.டேனியல், வழக்கறிஞர் பா.ராமசந்திரன், கணேஷ் ஆகியோர் உட்பட, பலர் கலந்துக்கொண்டனர்.