![](admin/uploads/.60e932ff684815.60873920.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கீழப்பாவூர் பேரூராட்சியில் உள்ள வட்டாலூரில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் மருத்துவர் தியோபிலஸ் ரோஜர் ஆகியோரின் அறிவுரைப்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. முகாமை திருநெல்வேலி நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான் சுபாஷ் முன்னிலையில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பூலாங்குளம் குயின்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் ராமசெல்வம் மற்றும் புனிதா ஆகியோர் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினர்.
முகாமில் ஆவுடையானூர் கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக பாவூர்சத்திரம் கால்நடை மருத்துவர் கிருஷ்ணமணி நன்றி கூறினார்.