Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் – 2023

பிப்ரவரி 07, 2023 08:03

நாமக்கல் : - தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) மூலம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாமக்கல் வளாகத்தில் 13.02.2023 அன்று (முற்பகல் 10.00 மணி பிற்பகல் 4.00 மணி வரை) நடைபெற உள்ளது. 


அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ (ITI) பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ– 2 எண்கள், ஆதார் அட்டை, தேசிய / மாநில தொழிற் சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுநர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன் பெறலாம்.


மேலும் விபரங்களை அறியும் பொருட்டு உதவி இயக்குநர் மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், மோகனூர் ரோடு, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி (அஞ்சல்), நாமக்கல் - 637 002 அவர்களை நேரிலும் மற்றும் தொலைபேசி (04286 - 290297, 79041 11101, 94877 45094, 90802 42036) வாயிலாகவும் தொடர்பு கொண்டுஅறிந்துக் கொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்