Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி  அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆர்ப்பாட்டம் 

பிப்ரவரி 07, 2023 08:11

நாமக்கல் : - தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்ட மையம், தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பி.நடேசன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.தங்கராசு வரவேற்றார். அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பி.முருகேசன் துவக்க உரையாற்றினார். பொது சுகாதாரத்துறை மாவட்ட செயலாளர் வி.இளவேந்தன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.பழனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயப்பிரகாசம், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் கு.ராஜேந்திர பிரசாத் கோரிக்கை அடங்கிய முழக்கமிட்டனா். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ. 6750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதிய வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரியும் அவர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்குவது,  ஏதுவாக வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறைகளிலும் உள்ள நிரந்தர காலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறைகளிலும் உள்ள நிரந்தர காலம் வரை ஊதியத்திலான காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பணியிடங்களை ஒதுக்கி, அதில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணி மூப்பு அடிப்படையில் பதவி வழங்கப்பட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை விட்டுவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் ஆர்.செல்லம்மாள் நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணியில் உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்