Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட பூப்பந்தாட்டக் கழக பொதுக்குழு கூட்டம்! புதிய நிர்வாகிகள் தேர்வு!

பிப்ரவரி 08, 2023 08:19

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்ற, மாவட்ட பூப்பந்தாட்டக் கழக பொதுக்குழு கூட்டம்! புதிய நிர்வாகிகள் தேர்வு!


திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின், இந்த  ஆண்டிற்கான (2023) "முதலாவது பொதுக்குழுக்கூட்டம்", திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், நேற்று (பிப்ரவரி.7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருநெல்வேலி "மனோன்மணியம்" சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டம்,  இடையன்குடி, கால்டுவெல்  (டி.டி.டி.ஏ.) மேல்நிலைப்பள்ளிதலைமை  ஆசிரியருமான அ.சாத்ராக் ஞானதாசன் முன்னிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாகிகள், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பி.பி.பசீர்அலி, துணைத்தலைவராக வெள்ளப்பாண்டி யன், செயலாளராக பிரபாகர், பொருளாளராக அலெக்ஸ் கிங்ஸ்லி, கவுரவத்தலைவராக சாய்ராம் ராஜா, துணைத்தலைவர்களாக சந்திரசேகரன் என்ற கண்ணன், திவாகரன், கூடங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சான்டல் முத்துராஜ், சோமசுந்தரம், தமிழ்வாணன் ஆகியோரும், உதவிச் செயலாளர்களாக சுரேஷ்குமார், "பைலட்" சாகுல் அமீது, கூடங்குளம் இக்னேஷியஸ் டைனஸ், ராமலிங்கம், கூடங்குளம் சித்திரைசெல்வன் ஆகியோரும், சட்ட ஆலோசகராக ஜிம்நியூபெல், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக மோசஸ் செல்வராஜ், சண்முகம், மனோகர் ஆகியோரும்,  தேர்வு செய்யப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்