Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலங்குளம் அண்ணாநகரில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

பிப்ரவரி 08, 2023 08:23

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் டெங்கு காச்சல் பரவி வருகின்றது இதனை தடுக்கும் வகையில்  ஆலங்குளம் பூ உலகை காப்போம் மன்றத்தினர் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார் சுகாதார ஆய்வாளர் கெங்காதரன் துவக்கி வைத்தார். பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்திகை அருந்தினர்.

மன்றத்தின் தலைவர் ராஜா, ஆலோசகர் இளங்கோ, செயற்குழு உறுப்பினர்கள் முருகன், ராமச்சந்திரன், பொன்னுத்துரை ,வினோத் குமார், இசக்கி ராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்