Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாளையங்கோட்டையில், நெல்லை மாநகர காவல்துறை நடத்திய, மக்கள் குறை தீர்க்கும் முகாம்! துணை ஆணையர்கள் பங்கேற்று, மனுக்களை பெற்றனர்!
திருநெல்வேலி :- பாளையங்கோட்டை, ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், ஒவ்வொருவாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும், மக்கள் குறைதீர்க்கும் முகாம், இன்று ( பிப்ரவரி.8) காலையில், வழக்கம் போல நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர கிழக்கு மண்டல துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன், மற்றும் மேற்கு மண்டல காவல் துணை ஆணையாளர் கே.சரவணன் ஆகியோர், குறைதீர்க்கும் முகாமிற்கு வந்திருந்த, மொத்தம் 14 மனுதாரர்களிடமிருந்து, புகார் மனுக்களை, பெற்றுக்கொண்டு அவற்றின் விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர், மனுதாரர்களிடம் பேசிய, துணை ஆணையாளர்கள், "பெறப்பட்டுள்ள புகார் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு கிடைப்பதற்கு, வழிவகை செய்யப்படும்!" என்று, உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து, ஒவ்வொரு சரகத்திலும் இருந்து வந்திருந்த, உதவி ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, அறிவுறுத்தினர். நகை கடையிலிருந்து, தன்னுடைய பணத்தை மீட்டுத்தருமாறு, சென்ற வாரம் கொடுத்த, புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள், மனுதாரருக்கு சேர வேண்டிய, 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டுத் தந்ததிற்காக, நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு, ரகுமத் நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் நேரில் வந்து, தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.