Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரி மாணவர் உயிரிழப்பு:  சிவசேனா கட்சியின் தமிழ்நாடு துணை செயலாளர் எம்.சிவகுமார் இரங்கல்

பிப்ரவரி 08, 2023 11:08

சென்னை: சென்னை வண்டலூரை சேர்ந்த ஆட்டோ நல சங்க தலைவரும்,  அதிமுக பிரமுகருமான நடராஜன் -பவானி தம்பதியர்களின் மூத்த மகன் என் சஞ்சய். வண்டலூர் அருகில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

அவர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட கோவளம் கடற்கரைக்கு ஏழு பேருடன் சென்றுள்ளார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய பிறகு நீரில் குளிக்க சென்ற அவர்கள் கடற்கரையில் சற்று ஆழம் மிக்க பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.

அதில் சஞ்சையும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த அவருடைய நண்பரும் சற்று கடற்கரையில் வெகு தூரம் சென்றதனால் திரும்பி கரைக்கு வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. சக நண்பர்கள் கரையில் இருந்து கூச்சலிட்டும் அங்குள்ள ஊர் மக்களிடம் இவர்கள் சென்றதை கூறி இருக்கிறார்கள். 

அங்கு விரைந்த அனைவரும் அங்குள்ள மக்களின் உதவியாலும் காவல்துறையின் உதவியாளும் மேலும் தீவிர தேடலில் ஈடுபட்டனர். அப்போது ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சயின் நண்பரின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. அதற்கு மறுநாள் சஞ்சயின் உடலும் பினமாக மீட்டெடுக்கப்பட்டது. பிறகு செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த பரிதாபமான நிகழ்வு ஊர் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

கடல்நீரில் மூழ்கி உயிரிழந்த சஞ்சயின் குடும்பத்திற்கு சிவசேனா கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில துணை செயலாளர் எம்.சிவகுமார், சஞ்சயின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தலைப்புச்செய்திகள்