![](admin/uploads/.61f0dc4d5d2d71.40197431.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலியில், காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிப்பு! திருநெல்வேலி,பிப்.13:- இந்திய சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பிலான, கடைசி முதலமைச்சருமான எம்.பக்தவச்சலத்தின், 36-வது ஆண்டு "நினைவு தினம்" இன்று (பிப்ரவரி.13) தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளரும், பக்தவச்சலம் அறக்கட்டளையின் அறங்காவலருமான, சு.சண்முகவேலன் தலைமையில், வண்ணம் மற்றும் வாசமிகு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த "பெரியவர்" பக்தவச்சலம் திருவுருவப்படத்திற்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கர பாண்டியன், "மலர் மாலை" அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எஸ்.ராஜேஷ் முருகன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.என்.உதயகுமார், மண்டலத்தலைவர்கள் மேலப்பாளையம் எம்.ஒய்.ரசூல்மைதீன், பாளையங்கோட்டை பி.வி.டி.ராஜேந்திரன்,
மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர் "தென்கலம்" ஜாகீர் உசேன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் கே.எஸ்.மணி, "சம்சா" செய்யது அலி, "கல்வியாளர்" ரவிச்சந்திரன் ஆகியோரும், "பெரியவர்" பக்தவச்சலம் திருவுருவப்படத்திற்கு, 'மலர்' தூவி, "புகழ் அஞ்சலி" செலுத்தினர்.