Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலங்குளத்தில் தன்னார்வலர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கினார்

பிப்ரவரி 13, 2023 04:13

ஆலங்குளத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கிய தன்னார்வலர்கள். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனையெடுத்து ஆலங்குளம் சுகாதாரத்துறையுடன் இணைந்து தன்னார்வலர் அமைப்பான பத்ரா ஆன்மீக நண்பர்கள் குழு மற்றும் ஆலங்குளம் பசுமை இயக்கம் சார்பில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

இன்று காலை 7 வது வார்டு பகுதி, பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை பகுதி மக்களுக்கு  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்