![](admin/uploads/.5f8442675acf70.78192074.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை கௌரிவாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலிப்பின் சகோதரர் நிர்மல் மற்றும் கீர்த்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவசேனா சார்பில் மாநில துணை செயலாளர் மு . சிவக்குமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் சிவசேனாவின் மாநிலத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உட்பட அமைப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதையடுத்து, மாநிலத் தலைவர் எம். ரவிச்சந்திரன், நில துணைச் செயலாளர் மு. சிவக்குமார் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
பிப்ரவரி 14 வேலன்டைன்ஸ் டே என்பதனை காதலர்கள் தினமாக இந்தியாவில் ஊடுருவி பல ஆண்டுகளாக ஆகிவிட்டது. இது கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்தும். நாம் இதிலிருந்து மீண்டு வர வேண்டும்.
வாலிபர்கள் பெற்றோர்களின் அரவணைப்பில் ஒழுக்க நெறியுடன் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்போம் என்று இந்த நாளில் சூழ் உரை ஏற்பது நல்லதாக இருக்கும் என்று கூறினார்கள்.