![](admin/uploads/.5f966882060db8.22159355.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம் : குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் தமிழக கூடுதல் தலைமை செயலரும், தமிழக வருவாய்த்துறை ஆணையருமான பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக கூடுதல் தலைமை செயலரும், தமிழக வருவாய்த்துறை ஆணையருமான பிரபாகரன், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது : தாலுக்கா அலுவலகத்தில் உள்ள ஈ சேவை மையத்தினை ஆய்வு செய்து, வருமான சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பம் எவ்வளவு உள்ளது? எத்தனை நாட்களில் விநியோகம் செய்யப்படுகிறது? பெயர்கள் நீக்கல், சேர்த்தல் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பது குறித்தும், ஓ.ஏ.பி. ஆணைகள் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் எனவும், இதுவரை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது? விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்த எத்தனை நாட்களில் ஆணைகள் வழங்கப்படுகிறது? என்பது குறித்தும், நில அளவை பிரிவில் உட்பிரிவு பட்டா உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு போன் செய்து, சான்று கேட்டு எப்போது விண்ணப்பம் செய்தீர்கள்? எப்போது சான்று பெற்றீர்கள்? என கேட்டறிந்தார்.