Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணவன், மனைவி விஷமருந்தியதில் இருவரும் பலி

பிப்ரவரி 17, 2023 01:51

குமாரபாளையம் : குமாரபாளையம் அருகே கணவன், மனைவி விஷமருந்தியதில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் இறந்தனர்.


குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர்கள் கணேசன், 70, தங்கம்மாள், 65. தம்பதியர். கூலி. இருவருக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை மோசமான நிலையில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே, பிப். 13ல்  மாலை 04:00 மணியளவில் இருவரும் வீட்டில் தனியாக இருக்கும் போது விஷமருந்தியுள்ளனர்.

இது பற்றி இவரது மகன் சரவணனுக்கு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் தர, நேரில் வந்த இவர் பெருந்துறை ஜி.ஹெச்.ல் சிகிச்சையில் இருந்த பெற்றோரை கவனித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 08:40 மணியளவில் கணேசன் இறந்தார். நேற்று அதிகாலை 04:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி தங்கம்மாள் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறனர்.

தலைப்புச்செய்திகள்