Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூல் முறுக்கு மெசின் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு தீர்மானம்

பிப்ரவரி 17, 2023 01:55

குமாரபாளையம் : குமாரபாளையத்தில் நூல் முறுக்கு மெசின் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் கூலி உயர்வு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொங்கு மண்டல நூல் முறுக்கு மெசின்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது பொதுக்குழு கூட்டம், சங்க  தலைவர் செந்தில்ராஜா தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்றது.

இதில் சங்க  தலைவராக  செந்தில்ராஜா, செயலராக லோகநாதன், பொருளராக பிரபாகரன் உள்ளிட்டவர்கள்   புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடித்தல், மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தல், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வட மாநில தொழிலாளர்கள் வருகை குறித்து வரைமுறைப்படுத்த வேண்டும், முறுக்கு நூல் உற்பத்தியாளர்களுக்கு  கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்