Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் சூரிய கவுண்டம்பாளையம் அருகே சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் நிலைத் தடுமாறிய பேருந்து, புளிய மரத்தில் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் கணேசன் (70) என்பவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் இடது புறமாக பேருந்தை திருப்பியதில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த புளிய மரத்தில் பேருந்து மோதியதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகள் பயணிகள் என பலர் லேசான காயம் அடைந்தனர்.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கூத்தாநத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன் படுகாயம் அடைந்தார். இதே போல் பேருந்தில் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணம் செய்த மேனகா என்ற கல்லூரி மாணவிக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட தகவலாக இருசக்கர வாகனத்தில் வந்த கணேசன் என்பவர் பெட்ரோல் பங்குக்கு திரும்ப பஸ் வருவதை கவனிக்காமல் திரும்பியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.