Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவிழா பட்டாசு வெடியில் காயமடைந்த கூலி தொழிலாளிக்கு ஆறுதல் கூறிய சேர்மன்

பிப்ரவரி 18, 2023 02:32

குமாரபாளையம் : குமாரபாளையம் திருவிழா பட்டாசு வெடியில் காயமடைந்த கூலி தொழிலாளிக்கு  சேர்மன் ஆறுதல் கூறினார்.


குமாரபாளையம் வேதாந்தபுரம் பகுதியில் வசிப்பவர் குமார், 38. கூலி தொழிலாளி. காளியம்மன் திருவிழா சமயத்தில் வெடிகள் வெடிப்பது இவர்களது உறவினர்கள் என்பதால், பிப். 14 ல் திருவிழா பூச்சாட்டு நாளன்று வெடி வெடிக்கப்பட்டது.

இதில் முகம், மார்பு பகுதியில் தீக்காயம் ஆகி மயக்கமடைந்ததால்,  உடனே குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். நேற்று இவருக்கு நினைவு திரும்பியது. இது குறித்து விழாக்குழுவினர், சேர்மன் விஜய்கண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

ஜி.ஹெச்.க்கு நேரில் வந்த சேர்மன் விஜய்கண்ணன், குமாருக்கு அறுதல் கூறி, நிதி உதவி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கி உதவினார். திருவிழாக்குழுவினர் ரகுநாதன், அன்பரசு, ஐயப்பன் ஆகியோர் குமாருக்கு ஆறுதல் கூறினார்.

தலைப்புச்செய்திகள்