![](admin/uploads/.5cac3706b6b6a2.08054831.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு :– திருச்செங்கோடு ஒன்றியம் வட்டூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் பணிக்கான பூமி பூஜை துவக்க விழா நடைபெற்றது.
ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட திமுக துணை செயலாளர் K.மயில்சாமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் S.M மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். உடன் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.