![](admin/uploads/.5e93fefb26d858.66401930.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 , நகராட்சி நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், பேரூராட்சி நமக்கு நாமே திட்டம், நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பணிகள், பட்டா கோரி நிலுவையில் உள்ள மனுக்கள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் முகவரி மனுக்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் திரு.சி.ந.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், இணை இயக்குநர் மருத்துவபணிகள் மரு.ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெ.பிரபாகரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட நுகர்வோர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலையரசு, உட்பட நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.