Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம் : ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, வருண் மருத்துவமனை, இராசிபுரம் மற்றும் ஜே.சி.ஐ இராசிபுரம் மெட்ரோ ஆகியவை இணைந்து நடத்திய ஒரு நாள் இலவச பொது மருத்துவ முகாம் தேங்கல்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக ராசிபுரம் வருண் மருத்துவமனையின் பொது மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, இலவசமாக சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுரூபவ் ஆக்ஸிஜன் மற்றும் நாடித்துடிப்பு அளவு ஆகியவற்றை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இம்முகாமில் ஜே.சி.ஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பினர், கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமில் பயனடைந்த பொதுமக்களும், தேங்கல்பாளையம் ஊராட்சி தலைவரும் சேவையைப் பாராட்டி கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.