![](admin/uploads/.6190e8e22af840.80102312.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் எம்.பியுமான தோழர் தா. பாண்டியன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கழக செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.மணிவேல், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் மீனா, ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழா் தா.பாண்டியன், அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி நினைவேந்தல் செய்தனர். இந்த நிகழ்விற்கு சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை, திராவிட விடுதலைக் கழகம், இளைஞர் பெருமன்றம் போன்ற பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர்,
சி.பி.ஐ நகர துணைச் செயலாளர் சாதிக்,, இளைஞர் பெருமன்றம் தாலுக்கா தலைவர் வேம்பு, சி.பி.ஐ நகர துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர குழு உறுப்பினர் பயாஸ், ராசிபுரம் நகர் மன்ற உறுப்பினர் வி.சி.க பழனிச்சாமி, ஆதித்தமிழர் பேரவை கண்ணன், தி.வி.க நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, சுகுவளவன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.