Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார் பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன், கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இருளப்பன் வரவேற்றார். மாவட்டக் கழக அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட கழக இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் பசுவதி, வீரபாண்டியன், மாவட்ட கழக பொருளாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து , மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் காத்தவராயன், சந்திரகலா, தளபதி பிரேம்குமார், சிவ சீதாராம்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அமல்ராஜ், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், முருகேசன், பேரூர் கழகச் செயலாளர்கள் கார்த்திக் குமார், முத்துராஜன், சங்கர், சுப்பிரமணியன், மற்றும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.