Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலையில் எம்.பி. தொகுதி நிதியில்  7 உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு

மார்ச் 15, 2023 03:38

நாமக்கல், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 16.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 உயர்மின் கோபுர விளக்குகளை கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆலந்தூர்நாடு ஆலேரிப்பட்டி பஸ் ஸ்டாப், குண்டூர்நாடு நத்துக்குழிப்பட்டி பஸ் ஸ்டாப், எடப்புளிநாடு செங்கரை பஸ் ஸ்டாப், அரியூர்நாடு குழிவளவு பஸ் ஸ்டாப், வாழவந்திநாடு சோளக்காடு சந்தை, பைல்நாடு மேக்கிளிக்காடு பஸ் ஸ்டாப், சித்தூர்நாடு நரியங்காடு பஸ் ஸ்டாப் ஆகிய 7 இடங்களில் ரூ 15:31 லட்சம் மதிப்பில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சின்ராஜின், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.


இதையொட்டி, உயர் கோபுர மின்விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உயர்கோபுர மின் விளக்குகளை துவக்கி வைத்தார்.


விழாவில் கொல்லிமலை வட்டார வளர்ச்சி அதிகாரி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் சந்திரசேகர், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் கொ.ம.தே.க. மாதேஸ்வரன் உள்ளிட்ட தொகுதி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்