Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வு

மார்ச் 19, 2023 07:35

தென்காசி: தென்காசி ஒன்றியத்தில் 37 பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இம்மையங்களில் பயிலும் 15 வயதிற்கு மேற்பட்ட  கற்போர்களுக்கு கடந்த 3 மாதங்களாக  அடிப்படை  எழுத்தறிவு கல்வி தன்னார்வலர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.

இன்று 19.03.2023 அன்று அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தேர்வை நடத்தினர்.வட்டாரக்கல்வி அலுவலர்கள் ,வட்டார வள மைய மேற்பார்வையாளர்,ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

தலைப்புச்செய்திகள்