Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளராக பா.ஜ.க. ஆனந்தன் நியமனம்

மார்ச் 19, 2023 07:36

வாசுதேவநல்லூர்:  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  உத்தரவின் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவரான அ.ஆனந்தன் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட ஆணையை பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பிரபல இசையமைப்பாளர் தீனா, வாசுதேவநல்லூர் யூனியன் விஸ்வநாதப்பேரி  கிராமத்தில் உள்ள அ.ஆனந்தன் அலுவலகத்தில்  வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார்,  தென்காசி மாவட்ட தலைவர் வலசை .வரதராஜன், கலந்து கொண்டு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் அ.ஆனந்தனுக்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா மற்றும் மாவட்ட  நிர்வாகிகள், வாசுதேவநல்லூர் ஒன்றிய , நகர  நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்