Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பீட்சா தயாரிப்பு திருவிழா

மார்ச் 22, 2023 03:20

ராசிபுரம், ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய ஹோட்டல் மேனேஜ்மென்ட்; துறை சார்பாக மாணவ, மாணவிகள் பீட்சா தயாரித்து காட்சிப்படுத்தும் திருவிழாவானது நடத்தபட்டது.


இத்திருவிழாவிற்கு கல்லூரியின் செயல் இயக்குநர் மஞ்சு முத்துவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செஃப். முனைவர். குமரேசன்
கோகுலநாத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழும் பீட்சா பற்றிய  சந்தேகங்களுக்கான விளக்கங்களையும்ரூபவ் அதனை சந்தைப்படுத்தும் முறைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

இதன் வாயிலாக பீட்சா தயாரிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சந்தைபடுத்துதல் போன்ற நுணுக்கங்களை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் - கல்வி முனைவர் இரா. செல்வகுமரன், முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜியகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர். கௌரிசங்கர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத்தலைவர் மோகன்ராஜ், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்