Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் கலைஞருக்கு முழு உருவச்சிலை ராஜேஸ்குமார் எம்.பி தலைமையில் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

மார்ச் 25, 2023 05:24

நாமக்கல், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று ராஜேஸ்குமார் எம்.பி தலைமையில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, சேந்தமங்கலம் (தனி) சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், தீா்மானக்குழு இணை செயலாளருமான மு.முத்துசாமி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், சட்டத்துறை இணை செயலாளருமான அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கூட்டப் பொருள் குறித்தும், தீா்மானங்கள் குறித்து விளக்கமளித்து பேசினார். 


கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான முத்தமிழறிஞர் கலைஞா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான வருகிற ஜூன் 3 ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை  ஒரு ஆண்டுகாலம் சிறப்பாக கொண்டாடுவது, அவரது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள செலம்பகவுண்டர் பூங்கா நுழைவு வாயில் அருகில், கருணாநிதியின் முழு உருவச்சிலை அமைப்பதென்றும், அதற்காக மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் சிலை அமைப்புக்குழு அமைப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுகவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டத்தை, திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவ ட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு தோறும் சென்று புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது, அரசுப் பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ்  18 ஆயிரம் வகுப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது,  வருகிற 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை அறிவிப்பின்படி, தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் சட்டசபை தொகுதி பார்வையாளர் அருள்மொழி, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் மு.முத்துசாமி, ராசிபுரம் சட்டசபை தொகுதி பார்வையாளர் தண்டபாணி ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட முழுவதும் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வது, உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சுந்தரம், ராணி, டாக்டர் மாயவன், ஆனந்தகுமார், முன்னள் எம்எல்ஏ க்கள் சரஸ்வதி மற்றும் ஒன்றி,  நகர, பேரூா் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்