![](admin/uploads/.6039050c4facb3.99343426.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி இளம் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மோடி அரசின் கைக்கூலியாக செயல்படும் சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் மூலம் பொய்யான வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டிக்கும் வகையில் மோடி ஆட்சிக்கு எதிராக ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர்கள் பாச்சல் சீனிவாசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வி. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்வில் ராசிபுரம் காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் என். லலிதா பாலு, நிர்வாகிகள் பழனிச்சாமி, ஜெயபால் ராஜ், சுகுமார், கோவிந்தராஜ், மதுரை வீரன், எஸ். கே. பி. எம். வடிவேல், பிரகஸ்பதி, ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், அத்தனூர் நகர காங்கிரஸ் தலைவர் பூபதி, பிள்ளா நல்லூர் பேரூர் நகரத் தலைவர் சண்முகசுந்தரம், அண்ணாமலை, பழனிவேல், டி.எம். எஸ். கண்ணன், குமரேசன், மகளிர் காங்கிரஸ் செயலாளர் மகேஸ்வரி, மற்றும் கர்ணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.