![](admin/uploads/.63ca9ae1e454f9.30132728.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலர் கோகுல்நாத், மனோகரன், நகர பொருளர் சிவராஜ், நகர பொது செயலர் சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர் மோகன்வெங்கட்ராமன், உள்பட பலர் பங்கேற்றனர்.