Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு விவேகானந்தா  மகளிர் கல்லூரியில்  பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்  

ஏப்ரல் 10, 2023 04:47

திருச்செங்கோடு. திருச்செங்கோடு விவேகானந்தா   கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில்  பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம்   நடைபெற்றது. இவ்விழாவில்  விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர்   கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குனர் டாக்டர் நிவேதா கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் பேபி  ஷகிலா வரவேற்புரை வழங்கினர் .

 
இந்நிகழ்ச்சியில் விவேகானந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் தனது  தலைமையுரையில்    மாணவிகள் ஆசிரியர்களின் சொல்படி நடக்க வேண்டும் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் மாணவிகள்  தாங்கள் பயிலும் அந்தந்த துறைகளில் சாதிக்க வேண்டும் என்றால்  பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு  உறுதுணையாக இருக்க வேண்டும் பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுடன்  குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாட  வேண்டும் அவர்களின் மனதில் உள்ள குறைகளை கேட்டு அறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.  

மேலும், துறை சார்ந்த பாடங்களில் முதல் மற்றும் இரண்டு மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்ட  நிகழ்ச்சியில்  சுமார் 1500 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் இந்த விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன்,   திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ குமரவேல் மற்றும் துறைத் தலைவர்கள்  பேராசிரியர்கள் மாணவிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


  விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் த.ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்