Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல்  S.M.மதுரா செந்தில் திறந்து வைத்தார்

ஏப்ரல் 10, 2023 05:27

குமாரபாளையம், குமாரபாளையம் நகரகழகத்தின் சார்பில் கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதலமைச்சர் பொதுமக்கள் கோடையில் தாகத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு குமாரபாளையம் பேருந்து நிலையத்தில்  பொதுமக்களின் தாகம்தீர்க்கவேண்டி  நீர்மோர்பந்தலை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் திறந்து வைத்தார்.

இதில் நகர திமுக செயலாளர் எம்.செல்வம் தலைமை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில சொத்துபாதுகாப்புக்குழு உறுப்பினர் ஜே.கே.எஸ்.மாணிக்கம், முன்னாள் நகர்மன்றத் தலைவரும், நகர அவைத்தலைவருமான வெ.ஜெகநாதன்,  மாவட்ட பொருளாளர் மு.ராஜாராம், தலைமைசெயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ், கிளை கழக செயலாளர் தக்காளி விஸ்வநாதன், நகர திமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள், நகர சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்