Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை தம்பதிகளுக்கு இலவச திருமணம் பொதுமக்கள் பாராட்டு..

ஏப்ரல் 17, 2023 07:43

ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து பல்வேறு சமுதாயப் பணிகள் மற்றும் இலவச அன்னதானம், ஏழை எளியவருக்கு நலத்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்குதல், போன்றவை செய்து வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்டம் இளைஞரணி தலைமை சார்பாக ராசிபுரத்தில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த  மணமகன் மணப்பெண் ஆகியோருக்கு இலவச திருமண விழா   மக்கள் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன்   அகில இந்திய பொதுச்செயலாளர்  புஸ்ஸி.N.ஆனந்த் Ex.MLA., அவர்களின் நல்லாசியுடன் 
ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் தம்பதிகளுக்கு இலவச திருமணத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பிரபு முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.


திருமணத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தனியார் கல்லூரியை சேர்ந்த ஆர். டி. அரங்கண்ணல், பி.மாலாலீனா ஆகியோர் திருமாங்கல்யம் வழங்கி சிறப்பித்தனர்.  தொடர்ந்து நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கத்தினர் புதுமண தம்பதிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சீர்வரிசைகள் வழங்கி சிறப்பித்தனர்.

 

இதனைத் தொடர்ந்தும் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில்   நாமக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் விக்னேஷ்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழன்.K.ராஜ்குமார்,  நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி தலைவர்  LEO.ஹரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர்   தமிழ்ச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் வினோத்,  நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்  M.சிவகலை,  M.கணேஷ் பிரபு, வெண்ணந்தூர் சபரி,  இராசிபுரம் நகர தலைவர்  MB.பாக்கியராஜ், திருச்செங்கோடு நகர தலைவர்  விஜய்  நாகராஜ்,சரவணன், மாவட்ட இணையதள நிர்வாகிகள் ஜீவா,கௌரி,  இராசிபுரம் நகர இளைஞரணி தலைவர்   சுதர்சன்,இளா,சூர்யா,  இராசிபுரம் ஒன்றிய தலைவர் கார்த்தி,பிரபு  மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ,  பொதுமக்கள் மற்றும் பொதுமண தம்பதிகளின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்