Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் ஜெகநாதன் திறந்து வைத்தார்

ஏப்ரல் 22, 2023 05:03

ராசிபுரம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவுறுத்தலின் படியும், வனத்துறை அமைச்சர் டாக்டர் .மா.மதிவேந்தன்  வழிகாட்டுதல் படியும், பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பாக 
அமைக்கபட்டுள்ள நீர் மோர் பந்தலை, பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் தலைமையில், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான கே.பி. ஜெகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், மாவட்ட பிரதிநிதி கன்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் பேரூர் துணை செயலாளர் 
தியாகராஜன், மீனாட்சி, அசோகன், ஒன்றிய பிரதிநிதி குமரேசன், சுப்ரமணியம், வெங்கடேஷ்,துணை அமைப்பாளர் மாரிமுத்து, இளையராஜா, நித்தியானந்த், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தீபன், மாணவரணி பிரகாஷ், மணிவாசகம்,வார்டு செயலாளர்கள்: பாஸ்கரன், காளியண்ணன், முருகேசன், வாசுதேவன், வேலுபிரபாகரன், அருள், புவனேஷ்வரன், மணிகண்டன், பன்னீர்செல்வம், குணசேகரன், சீனிவாசன், சதாசிவம், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் : கந்தசாமி, பானுமதி, தனபால், சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, தனசேகரன், மற்றும் கழக மூத்த முன்னோடிகள்: பொன்.அன்பழகன், துரைசாமி, பன்னீர்செல்வம், மோகன், ஜெயா மற்றும் பலர் கலந்து கொன்டனர்.

தலைப்புச்செய்திகள்