Saturday, 5th October 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி:ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதிய உணவு இடவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கங்காதரன் தலைமை தாங்கினார்.வருவாய்துறை ஊழிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கவட்டக் கிளை செயலாளர், செய்யது அலி ஆகியோர் பல்வேறு அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள்.
நிகழ்வில்அரசு ஊழியர்கள் சங்கம், நிர்வாகிகள்,சுகதார துறை அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டம் முடிவில்சுகதார துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட இணை செயலாளார் மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.