Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராட்டு விழா

மே 12, 2023 11:21

தென்காசி:வாசுதேவநல்லூர்ஒன்றியம் மேல கரிசல்குளம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் அ. ஜான்சன் ஆசிரியர் அவர்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மை துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள். அவர்களின் கல்வி புலமையினை பாராட்டும் வண்ணம் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் வாசு வட்டார கல்வி அலுவலர்கள் திரு.மாரியப்பன் மற்றும் திரு.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. டாக்டர் பட்டம் பெற்ற திரு ஜான்சன் அவர்களை பரமானந்தா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஏவிஎஸ் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் சேவியர் அவர்கள் பாராட்டினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகள் பாலமுருகன், திருமலை குமார், மற்றும் அலுவலக எழுத்தர்கள் சவுந்தர பாண்டியன்,மற்றும் முருகன், பழனி குமார் செய்து கொடுத்தார்கள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்