Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 கல்லூரியில் வேலை வாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா

மே 12, 2023 11:24

தென்காசி:புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வேலை வாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் S. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.  தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி S.R. ரம்யா அவர்கள்  சிறப்புரை ஆற்றி 206 மாணவ மாணவியர்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கான பணி ஆணைகளை வழங்கிப்  பாராட்டினார். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் ரஞ்சித் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி முனைவர் கணேசன் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்.  விழாவிற்கான  ஏற்பாட்டினைத்  துறைத் தலைவர்கள்,  பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் ஏற்பாடு செய்தனர்.

தலைப்புச்செய்திகள்