Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவர்கள் சாதனை.

மே 12, 2023 11:30

தென்காசி:பாவூர்சத்திரம் அருகே மாதா பட்டணத்தில் உள்ள ச.ச.வி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 291 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.இது அந்த பள்ளியின் 100% தேர்ச்சி ஆகும். மாணவி ஆர். ஜெயந்தி 575  மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தைப் பிடித்தார். கே. ரஞ்சனா 563 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், இசக்கி கனி என்ற மாணவி 560 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் இயற்பியல் பாடத்தில் ஒருவரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், வரலாறு பாடத்தில் 4 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் ஒருவரும், 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 71 மாணவ- மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியலில் 2 பேர், தாவரவியலில் 7 பேர், விலங்கியலில் 5பேர், உயிரியலில் 4 பேர்,  கணினி அறிவியலில் 2 பேர், வரலாற்றில் 9 பேர், பொருளியலில் 6 பேர், வணிகவியலில் 4 பேர், கணக்கு பதிவியலில் 5 பேரும் நூற்றுக்கு 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், பள்ளி நிர்வாக அதிகாரி மைக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்