Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.25 லட்சம் மதிப்பிலான 64 செண்ட் நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

மே 13, 2023 12:04

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சங்கரவேலு (81) என்பவருக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து சங்கரவேலு 02.05.2023 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துப்பாண்டி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அன்னலெட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி மாரியப்பன் மற்றும் குற்றப்பிரிவு ஆளிநர்களுக்கு துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி ஆவணம் ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன்,  அவர்களின் முன்னிலையில் சங்கரவேலு வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்