![](admin/uploads/.5d7c9b14b49564.63564688.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி மத்திய ரிசர்வ் போலீசார் குழுவாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு காரில் வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி ஒருவன், வீரர்களின் வாகனங்கள் மீது திடீரென மோதி அவற்றை வெடிக்க செய்துள்ளான்.
இந்த சம்பவத்தில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அணிவகுத்து சென்ற வாகனங்களின் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றியவர் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகரில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சாலையோரம் அமர்ந்திருந்த முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு தனது மதிய உணவை அவர் ஊட்டி விட்டார். அதனுடன் அவனது வாயை துடைத்து விட்டபடி, தேவையானபொழுது அருந்துவதற்கு நீரும் கொடுத்துள்ளார்.
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த செயலுக்காக சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இயக்குனர் ஜெனரல் கவுரவித்து உள்ளார்.