Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகில இந்திய இஷின்ரியூ கராத்தே  கருப்புப்பட்டை தேர்வில் மாணவ மாணவியா் தேர்ச்சி 

மே 15, 2023 11:45

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட தலைமை பயிற்சியாளர்கள் சென்சாய் .விஷ்ணு மற்றும் சென்சாய் கோபி ஆகியோர்கள் இஷின்ரியூ கராத்தே பயிற்சி அளித்து வருகின்றார்கள். இந்த பயிற்சியில் அகில இந்திய அளவிலான இஷின்ரியூ கராத்தே கருப்பு பட்டையை தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற இருக்கின்றது. அகில இந்திய இஷின்ரியூ  கராத்தே கழகத்தின் தலைவர் ஷீகான் ஹுசைனி தலைமையில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து  மாணவர்கள் முகம்மது சகின்,சக்திவேல்,வீர ராகவன்,முத்து ஆகாஷ்,நவீன் ராஜா மற்றும்  தென்காசி மாவட்டத்திலிருந்து மாணவர்கள் நவீன் பிரகாஷ், சங்கர் சர்மா, தஸ்வின் ,மகா பிரிய தர்ஷினி, பிளசிஸ்  சாண்ட்ரா,ஆகிய 10 மாணவ/மாணவியர்கள் அகில இந்திய கராத்தே கருப்பு பட்டை தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள். 

இம்மாணவர்கள் அனைவரும் கடந்த ஆறு வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார்கள். கருப்புப்பட்டை தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவியர்களை தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய் குமார் மற்றும் மதுரை மாவட்ட தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் தனகுமரன் இவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட தலைமை பயிற்சியாளர் மற்றும்  தேர்வாளர் செல்வ முத்துக்குமார் ஊக்குவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்