![](admin/uploads/.5fc1fc76648085.23321667.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி:ஆலங்குளம் அரிமா சங்கம் மற்றும் ஸ்ரீ மகாலிங்கம் பாரத் கேஸ் ஏஜென்சி,சல்யுட் சோப் இணைத்து நடத்தும் 207வது கண் சிகச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஆலங்குளம் காவல்நிலையம் பின்புறம் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஆலங்குளம் மகாலிங்கம் பாரத் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் லயன் பாலசுப்ரமணியன்,முத்து கார்த்தி, வெங்கடேஸ்வரன்,முகாமை ஏற்பாடு செய்தார்.
செயலாளர் லயன் முத்து கிருஷ்ணகுமார், பொருளாளர் லயன் அரவிந்த் தலைமை தாங்கினர்.செயலாளர் மூத்த அரிமா லயன் உதயராஜ் அவர்கள் மருத்துவர் கிறிஸ்டி, தர்ஷனா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி முகாமை தொடங்கி வைத்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அரிமா நண்பர்கள் லயன் திருமலை செல்வம்,லயன் பெரியாண்டவர்,லயன் செல்வம்,லயன் கணேசன்,லயன் சரவணன்,லயன் தங்கசெல்வம்,லயன் கிட்டு (எ ) கிருஷ்ணன் மற்றும் பல அரிமா நண்பர்கள்,பயனாளிகள் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.