Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.10 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்கு

மே 19, 2023 09:47

பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஞானதிரவியம் எம்.பி. இயக்கி வைத்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் தினசரி காய்கனி சந்தை அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் பங்கேற்று, மின் விளக்கினை இயக்கி வைத்தார். மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன், காய்கனி சந்தை தலைவர் ஆர்.கே.காளிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராதாவிநாயகபெருமாள், கோடீஸ்வரன், மாலதிமுருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகர் முருகன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின்யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு, முத்துச்செல்வி ஜெகதீசன், வெண்ணிலா தங்கச்சாமி, சாமுவேல்துரை ராஜ், பொன்செல்வன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், காய்கனி சந்தை, வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர்மாணிக்கராஜ் நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்