![](admin/uploads/.603b498ac00d70.99648900.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: மாவட்ட அளவிலான மெகா ஓவியப்போட்டி தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து 110 மாணவச்செல்வங்கள் கலந்து கொண்டனர்.முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு கேடயமும், கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு வாசிப்பு பயிற்சியினை இளம்வயதிலேயே பெறுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் வட்டார நூலகர் பிரம நாயகம் கிளைநூலகர் சுந்தர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், இளமுருகன் நூலகர்கள் ஜூலியாராஜ் செல்வி , நிஹ்மதுனிஸா ஓவிய ஆசிரியர் ஜெயசிங் வாசகர் வட்ட நிர்வாகிகள், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள், நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.