![](admin/uploads/.60f11533ad5fb2.13042509.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை:செங்கோட்டை நகராட்சி 'ஆணையாளர் ஜெயப்பிரியா அறிவுரையின்படி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி, எனது வாழ்க்கை! எனது சுத்தமான நகரம்! என்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் வார்டு எண்: 8 காந்தி ரோடு மற்றும் வார்டுஎண்:17 செல்லையா தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி முறையில் குப்பைகளை மேலாண்மை செய்திட செங்கோட்டை நகராட்சியின் சார்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளும் விதமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை மற்றவர்களுக்கு தேவைப்படும் வகையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காலணிகள், துணிகள், பொம்மைகள், நெகிழிப்பொருட்கள் புத்தகங்கள் மற்றும் இதுபோன்ற மறு பயன்பாடு செய்யக்கூடிய பொருட்களை ஆர்.ஆர்.ஆர் மையத்தில் வைத்திடுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை வாசகர் வட்டம் நூலகர்ராமசாமி கலந்துகொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தார்கள். பொதுமக்கள், மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.