Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருவந்தாவில் கூடுதல் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா

மே 20, 2023 10:23

தென்காசி: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 14 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழாவிற்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ பழனி நாடார் ஆகியோர் ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில் கரையாளனூர் சண்முகவேலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கருவந்தா பால் துரை, வீராணம் ஷேக் முகமது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிலிப் ராஜா, ஜெயபால், அண்ணாமலை, கிளைக் கழகச் செயலாளர் வெள்ளத்துரை, பரங்குன்றாபுரம் பரமசிவன், மரிதாய் புரம் ஜோசப், வாடியூர் மரியராஜ், அரசு ஒப்பந்ததாரர்கள் குத்தாலிங்கம், சந்தோஷ் ராஜா, செல்வம், அரசு ஒப்பந்தாரர் ஜெயராஜ், ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் பிலிப், பூசத்துரை, வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்