Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில்  492 மதிப்பெண் பெற்று முதலிடம் மாணவிக்கு பாராட்டு

மே 21, 2023 10:03

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா என்கிற மாணவி பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து 492 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற கார்த்திகா என்ற மாணவியை மாவட்ட கழகத்தின் சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் மாணவியை நேரில் சந்தித்து  மாணவியை பாராட்டி பொன்னாடை அணிவித்து ரூபாய் 5000/- ஊக்கத்தொகை வழங்கினார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை ,ரஹீம் முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மதுரை மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவண்ணா, மசூது விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் மைதீன், கனி அலுவலக அணி சமீம், இப்ராஹிம்  கலை இலக்கியப் பேரவை ராமராஜ் தொண்டர் அணி பரமசிவம், வெல்டிங் மாரியப்பன்  சுற்றுச்சூழல் அணி கஜேந்திரன், காசிகிருஷ்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்