Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மே 23, 2023 03:55

செங்கோட்டை: செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக அலுவலகத்தில் வைத்து கனிமவளக்கொள்ளையை கண்டித்து தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்நடந்தது.கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, கழக அம்மா பேரவை செயலாளர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும், விடியா திமுக அரசில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து தினமும் கணக்கில்லாமல் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த புளியரையில் மே 26 காலை 10
மணியளவில் அதிமுக சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கழக மகளிரணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவுமதுரை மண்டல துணை செயலாளர் முனைவர் சிவஆனந்த்
மாவட்டக் கழக அவைத்தலைவர் வீபி..மூர்த்தி மாவட்ட கழகதுணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் மாவட்ட கழக பொருளாளர் .சண்முகையா , மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் உட்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்